tamilni Recovered 5 scaled
உலகம்செய்திகள்

கனடா- இந்தியா மோதல் போக்கு… மசூர் பருப்பு பற்றாக்குறை?

Share

கனடா- இந்தியா மோதல் போக்கு… மசூர் பருப்பு பற்றாக்குறை?

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஒருவர் கனேடிய மண்ணில் கொல்லப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இந்தியாவில் மசூர் பருப்பு பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கனடாவில் குடியேறிய, இந்திய அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே இராஜாங்க ரீதியான சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தொடர்புடைய விவகாரம் வணிக ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக கவலை எழுந்துள்ளது. ஆனால் இந்திய அரசாங்கம் அப்படியான ஒரு நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாக கூறப்படுகிறது.

காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பலர் கனடாவில் இருந்து இயங்கி வருவது, இந்தியாவுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தி வந்தது. மேலும், இந்த விவகாரம் தற்போது ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையுடன் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில்,

இது இந்தியாவில் மசூர் பருப்பு (சிவப்பு பருப்பு) பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று பல நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், பருப்பு வகைகளின் இறக்குமதிக்கு இந்தியா பெரும்பாலும் கனடாவையே நம்பியுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ தரவுகளின்படி, 2022 மற்றும் 2023ல் கனடாவில் இருந்து ரூ.3,012 கோடி மதிப்பிலான 4.85 லட்சம் டன் பருப்பை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் ஒரு லட்சம் டன் மசூர் பருப்பு கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கனடாவுடன் தற்போதைய இறுக்கமான சூழல் காரணமாக இந்தியாவில் பருப்பு வகைகளின் பற்றாக்குறை ஏற்படாதவாறு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாகவே கூறுகின்றனர்.

மேலும், கனடாவில் இருந்து பருப்பு வகைகளுக்கு இறக்குமதி சிக்கல் ஏற்பட்டால், அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்யாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதியின் அளவை அதிகரிக்க செய்யவும் இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...