25 ஆண்டுகால பிரச்சனையில் சகோதரர்கள் அடித்துக்கொலை!
இந்தியாஉலகம்செய்திகள்

25 ஆண்டுகால பிரச்சனையில் சகோதரர்கள் அடித்துக்கொலை!

Share

25 ஆண்டுகால பிரச்சனையில் சகோதரர்கள் அடித்துக்கொலை!

இந்திய மாநிலம் குஜராத்தில் சகோதரர்கள் இருவர் நிலத்தகராறில் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சுரேந்தி நகர் மாவட்டத்தின் சமத்ஹியல் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அலல்ஜி பர்மர் (60), மனோஜ் பர்மர் (54).

இவர்களுக்கும் அமர்பாய் கூச்சர் என்பவரின் குடும்பத்தினருக்கும் 1998ஆம் ஆண்டு முதல் நிலம் தொடர்பில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

விளைநிலம் தங்களுக்கு சொந்தம் என இருதரப்பினரும் நீதிமன்றத்தை நாடிய நிலையில், அலல்ஜி பர்மரின் குடும்பத்தினருக்கு தான் நிலம் சொந்தம் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பர்மர் சகோதரர்கள் உழவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, அமர்பாய் கூச்சர் தனது குடும்பத்தினரிடம் சேர்ந்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

கூர்மையான ஆயுதங்களால் தாக்குதலுக்கு உள்ளானதால் அலல்ஜி, மனோஜ் சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் மூன்று பெண்கள், டிராக்டர் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார், கொலை குற்றம் தொடர்பில் ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...