25 ஆண்டுகால பிரச்சனையில் சகோதரர்கள் அடித்துக்கொலை!
இந்தியாஉலகம்செய்திகள்

25 ஆண்டுகால பிரச்சனையில் சகோதரர்கள் அடித்துக்கொலை!

Share

25 ஆண்டுகால பிரச்சனையில் சகோதரர்கள் அடித்துக்கொலை!

இந்திய மாநிலம் குஜராத்தில் சகோதரர்கள் இருவர் நிலத்தகராறில் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சுரேந்தி நகர் மாவட்டத்தின் சமத்ஹியல் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அலல்ஜி பர்மர் (60), மனோஜ் பர்மர் (54).

இவர்களுக்கும் அமர்பாய் கூச்சர் என்பவரின் குடும்பத்தினருக்கும் 1998ஆம் ஆண்டு முதல் நிலம் தொடர்பில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

விளைநிலம் தங்களுக்கு சொந்தம் என இருதரப்பினரும் நீதிமன்றத்தை நாடிய நிலையில், அலல்ஜி பர்மரின் குடும்பத்தினருக்கு தான் நிலம் சொந்தம் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பர்மர் சகோதரர்கள் உழவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, அமர்பாய் கூச்சர் தனது குடும்பத்தினரிடம் சேர்ந்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

கூர்மையான ஆயுதங்களால் தாக்குதலுக்கு உள்ளானதால் அலல்ஜி, மனோஜ் சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் மூன்று பெண்கள், டிராக்டர் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார், கொலை குற்றம் தொடர்பில் ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...