பிரித்தானிய மகாராணியாரின் இறுதி புகைப்படம் தேசிய விருதுக்காக தேர்வு!
உலகம்செய்திகள்

பிரித்தானிய மகாராணியாரின் இறுதி புகைப்படம் தேசிய விருதுக்காக தேர்வு!

Share

பிரித்தானிய மகாராணியாரின் இறுதி புகைப்படம் தேசிய விருதுக்காக தேர்வு!

பிரித்தானியாவில் தேசிய புகைப்பட விருது ஒன்றிற்காக நாமினேட் செய்யப்பட்டுள்ள 20 புகைப்படங்களில், மகாராணியாரின் இறுதி நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் புகைப்படங்களுக்கான தேசிய விருது அல்லது, UK Picture Editors’ Guild awards, அல்லது 2022 photo of the year விருது என்று அழைக்கப்படும் விருதுக்காக, 20 புகைப்படங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில், மக்கள் தங்களுக்குப் பிடித்த புகைப்படத்துக்கு வாக்களித்து, அதை 2022ஆம் ஆண்டுக்கான புகைப்படமாக தேர்வு செய்யலாம்.

செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வரை மக்கள் வாக்களிக்கலாம். தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் குறித்த முடிவுகள், அக்டோபர் 16ஆம் திகதி வெளியிடப்படும்.

மகாராணியாரின் இறுதி புகைப்படங்களில் ஒன்று
விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களில் மகாராணியாரின் இறுதி நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

லிஸ் ட்ரஸ் பிரதமராக தெர்வு செய்யப்பட்டபோது, அவரை சந்திப்பதற்காக மகாராணியார் வந்திருந்தபோது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. 8ஆம் திகதி, மகாராணியார் இயற்கை எய்திவிட்டார். ஆகவே, இந்த புகைப்படம் சிறப்பு வாய்ந்த ஒரு புகைப்படமாக கருதப்படுகிறது.

மேலும், தன் தாய் இளவரசி கேட்டின் வாயை கையால் மூடும் குட்டி இளவரசர் லூயிஸின் புகைப்படம், மகாராணியாரின் அருகே நின்றபடி, விமானங்களின் சத்தத்தைக் கேட்டு காதை மூடிக்கொள்ளும் லூயிஸ், மன்னரானதும் தன் பணியைத் துவக்கும் சார்லஸ், கால்பந்து வீரர் மெஸ்ஸி உலகக்கோப்பையை பிடித்திருக்கும் புகைப்படம் மற்றும் உக்ரைன் போர் தொடர்பான படங்கள் ஆகியவை நாமினேஷனில் உள்ளன.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...