கொழுந்துவிட்டெரியும் கனேடிய மாகாணம்... கடும் எச்சரிக்கை
உலகம்செய்திகள்

கொழுந்துவிட்டெரியும் கனேடிய மாகாணம்… கடும் எச்சரிக்கை

Share

கொழுந்துவிட்டெரியும் கனேடிய மாகாணம்… கடும் எச்சரிக்கை

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் காட்டுத்தீயால் சூழப்பட்டு, பல ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வரும் நிலையில், ட்ரோன்களை பறக்கவிட்டு, காட்சிகளை படம் பிடிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீயினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வேகமாக பரவிவரும் காட்டுத்தீயை படம்பிடிக்கும் நோக்கில் ட்ரோன்களை பறக்கவிடும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பொறுப்புடன் செயல்படவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்போது அவற்றைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் போதுமான அளவு வலியுறுத்த முடியாது என அமைச்சர் போவின் மா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சுமார் 30,000 பேர் வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் உள்ளனர், அத்துடன் 36,000 பேர் வெளியேற தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர் என்று போவின் மா கூறியுள்ளார்.

இதனிடையே, காட்டுத்தீயை படம் பிடிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் ட்ரோன் ஆபரேட்டர்கள் அவசரகால குழுக்களை பாதுகாப்பாக செயல்பட அனுமதிக்கும் வகையில் விலகி இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காட்டுத் தீயின் புகைப்படங்களை எடுக்க முயற்சிப்பது என்பது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல, ட்ரோன்களை காட்டுத்தீ பகுதிகளில் பறக்க அனுமதிப்பதும் சட்டவிரோதமானது என அமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுமார் 3,400 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கனடாவில் இந்தமுறை 14 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு காட்டுத்தீயால் சேதமடைந்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...