Britain to suspend flights
உலகம்செய்திகள்

விமானசேவையை நிறுத்தும் பிரிட்டன்!

Share

புதிய கொரோனாவின் தாக்கம் காரணமாக பிரிட்டன் 6 நாடுகளுக்கான விமானசேவையை நிறுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரசின் பரவுதலும் அதன் வீரியமும் மிகவும் அதிகமாக உள்ளதால் பிரிட்டன் இம்முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இவ் வைரசானது அதிக பாதிப்பை உலகில் ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இவ் வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இவ் வைரஸ் பிரிட்டனில் பரவாமல் தடுக்கும்வகையில் பிரிட்டன் அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வே, போத்ஸ்வானா, லெசோத்தோ, எஸ்வாதினி (ஸ்வாசிலாந்து) ஆகிய தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு நிறுத்தியுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருமென அறிவித்துள்ளது.

அத்தோடு அந்த 6 நாடுகளையும் சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...