Britain to suspend flights
உலகம்செய்திகள்

விமானசேவையை நிறுத்தும் பிரிட்டன்!

Share

புதிய கொரோனாவின் தாக்கம் காரணமாக பிரிட்டன் 6 நாடுகளுக்கான விமானசேவையை நிறுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரசின் பரவுதலும் அதன் வீரியமும் மிகவும் அதிகமாக உள்ளதால் பிரிட்டன் இம்முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இவ் வைரசானது அதிக பாதிப்பை உலகில் ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இவ் வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இவ் வைரஸ் பிரிட்டனில் பரவாமல் தடுக்கும்வகையில் பிரிட்டன் அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வே, போத்ஸ்வானா, லெசோத்தோ, எஸ்வாதினி (ஸ்வாசிலாந்து) ஆகிய தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு நிறுத்தியுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருமென அறிவித்துள்ளது.

அத்தோடு அந்த 6 நாடுகளையும் சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...