25 68489662e1278
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய அமைச்சர்களை தடை செய்த பிரித்தானியா

Share

தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்களான பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் இடமர் பென்-க்விர்(Itamar Ben-Gvir and Bezalel Smotrich) ஆகியோருக்கு எதிரான தடையை பிரித்தானியா விதித்துள்ளது.

குறித்த அமைச்சர்கள் பிரித்தானியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதோடு அங்கு அவர்களின் சொத்துக்கள் இருப்பின் அவை முடக்கப்படும்.

மேற்குக் கரையில் பலஸ்தீன மக்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவித்தமைக்காக இந்தத் தடையை விதிக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

இஸரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்தின் பகுதியாக இருக்கும் மேற்குறிப்பிட்ட அமைச்சர்கள், காசாவிற்கு உதவி செய்வதைத் தடுத்ததோடு பாலஸ்தீனியர்களை அந்தப் பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக இவர்கள் இருவரும் சர்வதேச ரீதியாக கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகினர்.

அவர்களின் வார்த்தைகளும் செயல்களும் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைக்கு வழிவகுத்ததாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்தில் கனடா, அவுஸ்திரேலியா, நோர்வே மற்றும் நியூஸிலாந்து போன்ற பிற நாடுகளும் பிரித்தானியாவுடன் இணைந்துள்ளன.

பிரித்தானியா சமீபத்தில் இஸ்ரேலுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....