33
உலகம்செய்திகள்

ரூ.8000 கோடி முதலீட்டால் சென்னையில் வரவிருக்கும் பிரம்மாண்ட குடியிருப்பு

Share

ரூ.8000 கோடி முதலீட்டால் சென்னையில் வரவிருக்கும் பிரம்மாண்ட குடியிருப்பு

சென்னையில் பிரிகேட் குழுமம் 15 மில்லியன் சதுர அடியில் குடியிருப்பு, அலுவலகம், சில்லறை வணிகம் மற்றும் விருந்தோம்பல் திட்டங்களுக்காக ரூ.8,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறித்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.13,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இது மத்திய சென்னையில் முதல் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவற்றை கொண்ட ஒரு மிகப்பெரிய அமைப்பை உருவாக்கவுள்ளது.

இதற்காக சிங்கப்பூரில் உலகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் SOG பணியமர்த்தப்படவுள்ளார்.

ஏற்கனவே குறித்த நிறுவனம் சென்னையில் சுமார் 5 மில்லியன் சதுர அடியிலான கட்டடங்களை கட்டியது.

மேலும் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளதாகவும் பிரிகேட் குழுமம் தெரிவித்துள்ளது.

1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிரிகேட் குழுமம், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், மைசூர், கொச்சி, குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகள், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அலுவலகங்களை கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...