tamilni 3 scaled
உலகம்

62 பேர்களை பலிவாங்கிய விமான விபத்து… ஒரு கிண்ணம் தேநீரால் உயிர் தப்பிய நபர்

Share

62 பேர்களை பலிவாங்கிய விமான விபத்து… ஒரு கிண்ணம் தேநீரால் உயிர் தப்பிய நபர்

வெள்ளிக்கிழமை கோர விபத்தில் சிக்கிய பிரேசில் பயணிகள் விமானத்தில் இருந்து ஒரு கிண்ணம் தேநீரால் உயிர் தப்பியதாக பயணி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த விமான விபத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் பலியாகியுள்ளனர். வெள்ளிக்கிழமை Voepass ஏர்லைன்ஸ் விமானமானது கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் சுழன்று, தரையில் விழுந்து நொறுங்கி தீ கோளமாக மாறியது.

இதில் 58 பயணிகள் உட்பட 62 பேர்கள் உடல் கருகி பலியாகினர். இந்த நிலையில் பயணிகள் தொடர்பில் உறுதியானத் தகவலுக்காக உறவினர்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமான விபத்தில் ஒரு கிண்ணம் தேநீரால் உயிர் தப்பிய பயணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வரும் Adriano Assis என்பவர் Cascavel பகுதியில் இருந்து São Paulo நகருக்கு செல்ல பகல் 11.56 மணி விமானத்திற்காக விரைந்துள்ளார்.

விமான நிலையத்தில் பகல் 9.40 மணிக்கு அவர் சென்றுள்ளார். ஆனால் அவரை உள்ளே அனுமதிக்க ஊழியர்கள் எவரும் அப்போது அங்கே இல்லை. காத்திருந்து பொறுமை இழந்த அசிஸ், ஒரு கிண்ணம் தேநீர் அருந்தலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

அத்துடன் விமான எண் 2283 தொடர்பில் புதிதாக தகவல் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் கண்காணித்து வந்தார். தேநீர் அருந்த சென்றவர், திரும்பி வரும் போது நேரம் 10.40. இதனால் உள்ளே அனுமதிக்க முடியாது என ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டது.

நொந்து போன அசிஸ், அந்த ஊழியர்களிடம் கெஞ்சியுள்ளார். கோபத்தில் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் கடைசி நொடியில் அவர்கள் அனுமதிக்காதது தமது உயிரை காப்பாற்றிவிட்டதாக அசிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஊழியர்கள் தங்கள் வேலையை எந்த சமரசமும் இன்றி செய்ததால் மட்டுமே தாம் உயிர் தப்பியுள்ளதாக அசிஸ் நன்றியுடன் தெரிவித்துள்ளார். இதனிடையே, விபத்தில் சிக்கிய விமானியின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் அனுபவம் கொண்ட 35 வயது Danilo Santos Romano என்பவரே விபத்தில் சிக்கிய அந்த விமானத்தின் விமானியாக செயல்பட்டுள்ளார். 2022ல் தான் Voepass ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார்.

சம்பவத்தன்று Cascavel பகுதியில் இருந்து Guarulhos நகருக்கு செல்லும் வழியில், 17,000 அடி உயரத்தில் வைத்து விமானம் கட்டுப்பாட்டை இழந்து, அந்தரத்தில் பலமுறை சுழன்று, இறுதியில் தரையில் மோதி வெடித்துள்ளது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 23 1
செய்திகள்உலகம்

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயற்சி! – இளைஞர் கைது; வெடிமருந்துகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல்!

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் உள்ள நாடாளுமன்ற (US Capitol) வளாகத்திற்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற...

image 1200x800 22 1
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் மராபி எரிமலை வெடிப்பு! – தொடர்ச்சியான நிலநடுக்கங்களால் பீதி; 3 கி.மீ தூரத்திற்குத் தடை!

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மராபி எரிமலை இன்று...

image 1200x800 35 1
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் ஆவணங்கள்: பிரான்ஸ் பிரபலங்கள் மீது பாயும் விசாரணை! – சிறப்புப் புலனாய்வுக் குழு அதிரடி நியமனம்!

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளில், பிரான்ஸ் நாட்டின் அரசியல்...