1597195 dgh
உலகம்செய்திகள்

ஹமாஸ் சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்பு: இஸ்ரேல் ராணுவம் தகவல்

Share

ஹமாஸ் சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்பு: இஸ்ரேல் ராணுவம் தகவல்

காஸாவில் ஹமாஸ் அமைத்த சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி காஸா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள 1,139 பேர் கொல்லப்பட்டனர்.மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பிணைக் கைதிகளாக காஸாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதனைத்தொடர்ந்து, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு திருப்பி கொடுப்பதாக நினைத்து நடைபெற்று வரும் போரில் இதுவரை 20,424 பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர்.

எந்த நாடுகள் கூறினாலும், ஐ.நாவின் போர் நிறுத்த கோரிக்கைகளையும் கேட்காமல் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது.

இதனிடையே, காஸாமுனையில் உள்ள பிணைக் கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுவித்தது.

இதனையடுத்து, பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுப்பட்டு வந்தது. இந்நிலையில், காஸாமுனையில் உள்ள 5 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதாவது, இடன் சிஷெர்யா, சிவ் டடூ, எலியொ டுலிடனொ, நிக் பெய்சர், ரொன் ஷெர்மென் ஆகிய 5 பேரை ஹமாஸ் பதுங்கு குழியில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் பிணமாக மீட்டுள்ளனர். மேலும், இவர்களின் சடலங்களை இஸ்ரேல் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் இஸ்ரோ ராணுவம் பகிர்ந்துள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...