உலகம்செய்திகள்

கிறிஸ்துமஸ் நாளில் வெறிச்சோடிய பெத்லஹேம் .., பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

Share

கிறிஸ்துமஸ் நாளில் வெறிச்சோடிய பெத்லஹேம் .., பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு இடையே நடைபெறும் போர் காரணமாக கிறிஸ்துமஸ் நாளான இன்று பெத்லஹேம் நகரம் களையிழந்து காணப்படுகிறது.

இயேசு கிறிஸ்து பிறந்ததாக கிறிஸ்துவர்களால் நம்பப்படும் பெத்லஹேம் நகரம் ஜெருசலேமின் தெற்கில் அமைந்துள்ளது. இங்கு உள்ள ‘Church of the Nativity’ தேவாலயத்தை காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள், சுற்றுலாப் பயணிகள் வருவர். முக்கியமாக, கிறிஸ்துமஸ் நாளில் பெத்லஹேம் நகரமே விழாக்கோலம் போல காட்சியளிக்கும்.

இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி முதல் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக் குழு இடையே போர் நடைபெற்று வருகிறது.

இதனால்,வெஸ்ட் பேங்கில் அதிகரித்த வன்முறையால் பெத்லஹேமிற்கு வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் யாரும் வரவில்லை என அங்குள்ள வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பெத்லஹேமில் பல தலைமுறைகளாக உள்ள அலெக்சாண்ட்ரியா என்ற ஹோட்டல் உரிமையாளர் ஜோய் கனாவதி, “இந்த ஆண்டுகிறிஸ்துமஸ் மோசமானதாக மாறிவிட்டது. கிறிஸ்துமஸ் மரம் இல்லை, மகிழ்ச்சி இல்லை, உற்சாகமில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பெத்லஹேம் மூடப்பட்டுள்ளது” என்றார்.

Church of the Nativity தேவாலயத்தை காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள், சுற்றுலாப் பயணிகளால் வரும் வணிகத்தை நம்பி இந்நகரத்தின் பொருளாதாரம் உள்ளது. தற்போது, விடுதிகள், உணவகங்கள் மற்றும் பரிசுபொருள் விற்பனை கடைகள் மூடப்பட்டு பெத்லஹேமே களையிழந்த நிலையில் உள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...