எச்சரித்த உக்ரைன் ஜனாதிபதி
உலகம்செய்திகள்

புடின் தொடர்பில் எச்சரித்த உக்ரைன் ஜனாதிபதி

Share

எச்சரித்த உக்ரைன் ஜனாதிபதி!

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை தகர்க்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டமிட்டு வருவதாக அச்சம் எழுந்துள்ளது.

குறித்த அணுமின் நிலையத்தில் இருந்து திடீரென்று ரஷ்ய துருப்புகள் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த அச்சம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சனிக்கிழமை விடுத்துள்ள எச்சரிக்கையில், அந்த அணுமின் நிலையம் தற்போது மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்றார்.

இதனிடையே, உக்ரைன் ராணுவ உளவுத்துறையின் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், Zaphorizhizhia அணுமின் நிலையத்தை தகர்க்கும் முடிவுக்கு ரஷ்யா வந்துள்ளது எனவும், இதனால் அணு கதிர்வீச்சு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள இந்த அணுமின் நிலையம் தொடர்பில் சர்வதேச சமூகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்தார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் தற்போது ஆபத்தில் உள்ளது என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, இது ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு ஒப்பானது என்றார்.

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே Zaphorizhizhia அணுமின் நிலையத்தை ரஷ்ய வீரர்களே கைப்பற்றி வைத்துள்ளனர். ஆனால் தற்போது, குறித்த பகுதியில் இருந்து அனைத்து வீரர்களும் வெளியேறியதாக தகவல் வெளியான நிலையிலேயே சந்தேகம் வலுத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...