6 21
உலகம்

2019ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒலிக்கத் துவங்கிய நாட்ரிடாம் தேவாலய மணிகள்

Share

2019ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒலிக்கத் துவங்கிய நாட்ரிடாம் தேவாலய மணிகள்

பிரான்சிலுள்ள புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயம் தீப்பற்றி எரிந்தபின், தேவாலய மறுசீரமைப்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று தேவாலய மணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒலிக்கச் செய்யப்பட்டன.

2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி, பிரான்சிலுள்ள புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயம் தீப்பற்றி எரிவதைக் கண்டு, பாரீஸ் நகர மக்களுடன், அந்த பயங்கரக் காட்சியை தொலைக்காட்சியில் கண்ட உலகமும் பதறியது.

தீப்பற்றி எரிந்த தேவாலயத்தை ஐந்து ஆண்டுகளில், மீண்டும் முன்னை விட அழகாக கட்டி எழுப்புவதாக உறுதியளித்திருந்தார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.

தற்போது நாட்ரிடாம் தேவாலயப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று தேவாலய மணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒலிக்கச் செய்யப்பட்டன.

அடுத்த மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 8ஆம் திகதி தேவாலயம் பொதுமக்கள் பயன்பட்டுக்கு மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, தேவாலய மணிகள் ஒலிப்பதைக் கேட்டு மக்கள் ஆனந்தமடைந்தார்கள்.

தீப்பிடித்த தேவாலயத்தை மறுசீரமைக்க சுமார் 250 நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான நிபுணர்கள் இணைந்து பணியாற்றியதுடன், பல மில்லியன் யூரோக்களும் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

810c8c30 dc46 11f0 a1ce 39295e57b193
உலகம்செய்திகள்

ருமேனியாவில் கஞ்சா புகைத்த அமெரிக்கருக்கு 9 மாத சிறைத்தண்டனை: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ருமேனியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றின் போது கஞ்சா பயன்படுத்திய அமெரிக்கப் பிரஜை ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம்...

25 693e99f4151ce
செய்திகள்உலகம்

டிட்வா சூறாவளியால் 29,649 வர்த்தக நிலையங்கள் பாதிப்பு: மீளக் கட்டியெழுப்ப சலுகை வட்டியில் கடன் உதவி!

‘டிட்வா’ சூறாவளி காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 29,649 வர்த்தக இடங்கள் மற்றும் ஏற்றுமதி...