6 21
உலகம்

2019ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒலிக்கத் துவங்கிய நாட்ரிடாம் தேவாலய மணிகள்

Share

2019ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒலிக்கத் துவங்கிய நாட்ரிடாம் தேவாலய மணிகள்

பிரான்சிலுள்ள புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயம் தீப்பற்றி எரிந்தபின், தேவாலய மறுசீரமைப்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று தேவாலய மணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒலிக்கச் செய்யப்பட்டன.

2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி, பிரான்சிலுள்ள புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயம் தீப்பற்றி எரிவதைக் கண்டு, பாரீஸ் நகர மக்களுடன், அந்த பயங்கரக் காட்சியை தொலைக்காட்சியில் கண்ட உலகமும் பதறியது.

தீப்பற்றி எரிந்த தேவாலயத்தை ஐந்து ஆண்டுகளில், மீண்டும் முன்னை விட அழகாக கட்டி எழுப்புவதாக உறுதியளித்திருந்தார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.

தற்போது நாட்ரிடாம் தேவாலயப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று தேவாலய மணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒலிக்கச் செய்யப்பட்டன.

அடுத்த மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 8ஆம் திகதி தேவாலயம் பொதுமக்கள் பயன்பட்டுக்கு மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, தேவாலய மணிகள் ஒலிப்பதைக் கேட்டு மக்கள் ஆனந்தமடைந்தார்கள்.

தீப்பிடித்த தேவாலயத்தை மறுசீரமைக்க சுமார் 250 நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான நிபுணர்கள் இணைந்து பணியாற்றியதுடன், பல மில்லியன் யூரோக்களும் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 8
உலகம்செய்திகள்

xபோர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் ஈரானை தொடர்ந்து தாக்கிவரும் நிலையில் வடக்கு ஈரானில் 5.1 ரிக்டர் அளவிலான...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 6
உலகம்செய்திகள்

தீவிரம் அடையும் ஈரான் – இஸ்ரேல் போர் – இலங்கைக்கு உதவும் இந்தியா

போர் நடவடிக்கை காரணமாக ஈரானில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர இந்தியா உதவ முன்வந்துள்ளது. இஸ்ரேல்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
உலகம்செய்திகள்

ஈரான் விடயத்தில் அமெரிக்க புலனாய்வு இயக்குநரின் தவறு..! ட்ரம்ப் கூறிய விடயம்

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், ஈரான் மற்றும் அணு ஆயுதம் தொடர்பில் தவறான...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 3
உலகம்செய்திகள்

செம்மணி மனிதபுதைகுழி தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு கடிம் எழுதிய உமா குமரன்

செம்மணி மனித புதைகுழி குறித்த விசாரணைக்கு சர்வதேச நாடுகளுடன் இணைந்து பிரித்தானியாவும் ஆதரவளிக்கவேண்டும் என்று பிரித்தானிய...