12 4
இந்தியாஉலகம்செய்திகள்

சீனாவின் புதிய வைரஸ் இந்தியாவில் பரவியதாக உறுதி.., முதன் முதலாக 8 மாத குழந்தைக்கு தொற்று

Share

சீனாவின் புதிய வைரஸ் இந்தியாவில் பரவியதாக உறுதி.., முதன் முதலாக 8 மாத குழந்தைக்கு தொற்று

சீனாவில் வேகமாக பரவும் HMPV, இந்தியாவில் முதன்முதலாக 8 மாத குழந்தைக்கு தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

அதாவது, மனித மெட்டாப்நியூமோவைரஸ் என அழைக்கப்படும் எச்.எம்.பி.வி (HMPV) வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சீனாவில் வடக்கு மகாணங்களில் இந்த HMPV வைரஸ் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த வைரஸால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர கண்காணிப்புடன் அரசு இருந்து வருகிறது.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள 8 மாத குழந்தைக்கு (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதில், குழந்தையை வேறு எந்த இடத்திற்கும் அழைத்து செல்லாத போதிலும் வைரஸ் தொற்று எப்படி வந்தது என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, குழந்தை கண்காணிப்பில் உள்ளதாகவும், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது

இதையடுத்து, 3 மாத பெண் குழந்தைக்கும் எச்.எம்.பி.வி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த 2 குழந்தைகளுக்கும் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னதாக சுவாச நோய்களை, கண்காணிப்பு வழிமுறைகளுடன் கையாள தயாராக உள்ளோம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...