tamilni 57 scaled
உலகம்செய்திகள்

மர்ம நபரால் புடின் உயிருக்கு ஆபத்து: பாபா வங்காவின் சில்லிடவைக்கும் புத்தாண்டு கணிப்புகள்

Share

மர்ம நபரால் புடின் உயிருக்கு ஆபத்து: பாபா வங்காவின் சில்லிடவைக்கும் புத்தாண்டு கணிப்புகள்

பிறக்கவிருக்கும் புத்தாண்டில் ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உயிருக்கு அச்சுறுத்தல் வரலாம் எனவும் பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பால்கன் மக்களின் நாஸ்ட்ராடாமஸ் என குறிப்பிடப்படும் பாபா வங்கா இதுவரை அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல், செர்னோபில் பேரழிவு, இளவரசி டயானாவின் மரணம் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி என பல சம்பவங்களை துல்லியமாக கணித்துள்ளார்.

தற்போது, பிறக்கவிருக்கும் 2024ல் ரஷ்ய ஜனாதிபதி புடின் மீதான தாக்குதல் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை கணித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது உள்ளூர் நபர் ஒருவரால் கொலை முயற்சியை பாபா வங்கா கணித்துள்ளார்.

மேலும், வல்லரசு நாடு ஒன்று உயிரியல் ஆயுதத்தை சோதனை செய்யலாம் அல்லது ஒரு நாட்டின் மீது பயன்படுத்தலாம் என பாபா கணித்துள்ளார். மேலும், ஐரோப்பா முழுவதும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கணித்துள்ளார்.

அத்துடன், அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தை அசைக்கப் போகும் பாரிய பொருளாதார நெருக்கடி குறித்து பாபா எச்சரித்தார். அதாவது அதிகரித்து வரும் கடன் அளவுகள், அதிகரிக்கும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பொருளாதார சக்தி மேற்கிலிருந்து கிழக்கிற்கு மாறுவதால் இந்த நெருக்கடி ஏற்படும் என அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், பயங்கரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகளும் 2024ல் எதிர்பார்க்கலாம் என பாபா கணித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...