2 1 scaled
சினிமாசெய்திகள்

ஜேர்மனியில் கையில் துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்: அலறிய பயணிகள்

Share

ஜேர்மனியில் கையில் துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்: அலறிய பயணிகள்

ஜேர்மனியில் உள்ள ஹேம்பர்க் நகர விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜேர்மனியின் ஹேம்பர்க் நகர விமான நிலையத்திற்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் காரில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அத்துடன் வானை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டது உடன், எரிந்து கொண்டு இருந்த 2 பாட்டில்களையும் விமான நிலைய வளாகத்திற்குள் தூக்கி எறிந்தார்.

இதனால் விமான நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அவசர விசாரணையை தொடங்கினர். அதில், விமான நிலையத்தின் பாதுகாப்பு பகுதியை உடைத்து கொண்டு மர்ம நபரின் கார் உள்ளே வந்ததையும், காரில் 2 குழந்தைகள் இருந்ததையும் கண்டுபிடித்தனர்.

மர்ம நபர் விமான நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்னதாக 2 குழந்தைகளை கடத்தி செல்வதாக அவருடைய மனைவியே பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மர்ம நபரின் இந்த திடீர் தாக்குதலால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, அனைத்து முனையங்களின் நுழைவு வாயில்களுக்கும் தற்காலிகமாக அடைக்கப்பட்டன.

மேலும் இந்த வன்முறை சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...