25 6846f44e4fa83
உலகம்செய்திகள்

நாடு திரும்பும் அகதிகளுக்கான உதவி குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை: சந்தோஷ் ஜா

Share

இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பும் அகதிகளுக்கான இருப்பிட மற்றும் வாழ்வாதார வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது அண்மையில் தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்து நாடு திரும்பிய 75 வயதுடைய முதியவர் ஒருவர் பலாலி விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்தியத் தூதுவரிடம் சுமந்திரன் எடுத்துரைத்தார்.

அதுமாத்திரமன்றி இந்திய அகதி முகாம்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்திருப்பது பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனைச் செவிமடுத்த இந்தியத் தூதுவர், மீண்டும் நாடு திரும்பும் அகதிகளுக்கு அவசியமான இருப்பிட மற்றும் வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் எனவும், இது பற்றி அரசுடன் கலந்துரையாடியிருப்பதாகவும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...