25 6846f44e4fa83
உலகம்செய்திகள்

நாடு திரும்பும் அகதிகளுக்கான உதவி குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை: சந்தோஷ் ஜா

Share

இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பும் அகதிகளுக்கான இருப்பிட மற்றும் வாழ்வாதார வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது அண்மையில் தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்து நாடு திரும்பிய 75 வயதுடைய முதியவர் ஒருவர் பலாலி விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்தியத் தூதுவரிடம் சுமந்திரன் எடுத்துரைத்தார்.

அதுமாத்திரமன்றி இந்திய அகதி முகாம்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்திருப்பது பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனைச் செவிமடுத்த இந்தியத் தூதுவர், மீண்டும் நாடு திரும்பும் அகதிகளுக்கு அவசியமான இருப்பிட மற்றும் வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் எனவும், இது பற்றி அரசுடன் கலந்துரையாடியிருப்பதாகவும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 68492b8d2bd89
உலகம்செய்திகள்

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சபாத் மையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாட்டில் வசிக்கும் இஸ்ரேலிய பிரஜைகளின் மத, பொழுதுபோக்கு மற்றும் உணவு மற்றும் பான நடவடிக்கைகளுக்காக நிறுவப்பட்ட...

25 684929aae08be
இலங்கைசெய்திகள்

மாநகரசபையொன்றின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிய அநுர தரப்பு

பண்டாரவளை மாநகர சபையின் மேயர் பதவியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிக் கொண்டுள்ளது. இன்று (11)...

25 6848f357eab31 1
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் மற்றுமொரு அதிரடி – பதற்றத்தில் பல சிறை அதிகாரிகள்

விசேட தினங்களில் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளின் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத கைதிகள் சட்டவிரோதமாக...

25 684921214c034
இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய பொதுமன்னிப்பு விவகாரம்! நீதிமன்றில் முன்னிலையாவாரா அதுல

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெற்ற பின்னர் சர்ச்சைக்குரிய வகையில் அனுராதபுரம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அதுல திலகரத்ன,...