3 1
உலகம்உலகம்செய்திகள்

இம்ரான்கானுக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

Share

இம்ரான்கானுக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் ஷெபாஸ் ஷெரிப் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இதனை கண்டித்து தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் இம்ரான்கான்.

இந்தநிலையில் இம்ரான்கான் மீது ஊழல், பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்குகள் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் இதுகுறித்தான வழக்கில் நீதிமன்றில் முன்னிலையாக இம்ரான்கானுக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது அவரை சுற்றிவளைத்து இராணுவவீரர்கள் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று இம்ரான்கான் உள்ளிட்ட அவரது கட்சி தலைவர்களுக்கு பிடியாணை பிறப்பித்து லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...