2 14 1 scaled
உலகம்செய்திகள்

மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்:100 விமானங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

Share

மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்:100 விமானங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீண்டும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 18 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளின் வான் தாக்குதலும் சமீபத்தில் அதிகரித்து வருகிறது.

அதிலும் ரஷ்ய தலைநகர் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் சமீபத்தில் நாட்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இது தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட கருத்தில், ரஷ்ய நிலப்பரப்பு மீதான தாக்குதல் போரில் தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதனால் கிட்டத்தட்ட 100 விமானங்கள் தாமதம் அடைந்துள்ளன.

இது தொடர்பாக மாஸ்கோ மேயர் தெரிவித்துள்ள தகவலில், நகரை நோக்கி வந்த உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது, இதனால் 103 விமானங்கள் ரஷ்ய தலைநகரில் இருந்து வெளியேற முடியாமல் போனது.

வ்னுகோவோவில் இருந்து பிற புறப்பட வேண்டிய 34 விமானங்கள் இதனால் தாமதம் ஆனதுடன், 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல  டொமோடெடோவோவில் 63 விமானங்கள், ஷெரெமெட்டியோவில் 6 விமானங்கள் தாமதமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 15
உலகம்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக ஈரான் – சீனா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான்...

Untitled 14
செய்திகள்உலகம்

லண்டனில் யூத சமூகத்தினருக்காகப் பிரத்யேக பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு

லண்டனில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைத்...

Untitled 13
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம்: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராகும் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் வசிக்கும் மாலத்தீவினரின் விசா சிக்கல்கள்: நிரந்தரத் தீர்வு குறித்து ஜனாதிபதி முய்ஸு உறுதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு, கொழும்பில் வசிக்கும்...