download 2 scaled
உலகம்செய்திகள்

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Share

2021ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு டாக்டர்களான டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுட்டியன் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் மிகச்சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்தவர்களுக்கு வருடந்தோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகின்றது.

நோபல் பரிசை பெற வேண்டும் என்பது மேற்குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களின் கனவாகவுள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு தொடர்பான அறிவிப்பு இன்று சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் அறிவிக்கப்பட்டது.

முதலில் மருத்துவ துறையில் சாதனை படைத்தவர்களுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

உடலை தொடாமல், வெப்பம், வலி, உடல் அழுத்தம் மற்றும் இதர விவரங்களைக் கண்டறியும் சென்சர் கருவியைக் கண்டுபிடித்த வைத்தியர்களான டேவிட் ஜூலியஸ் ஆர்டம் பட்டாஹவுட்டியன் இருவருக்கும் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...