சார்ஜர் வயரை கடித்த 8 மாத குழந்தை மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலி!
உலகம்செய்திகள்

சார்ஜர் வயரை கடித்த 8 மாத குழந்தை மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலி!

Share

சார்ஜர் வயரை கடித்த 8 மாத குழந்தை மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலி!

செல்போன் சார்ஜர் வயரை கடித்த 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செல்போனிற்கு ஜார்ஜ் போட்டுவிட்டு அதனை ஆஃப் செய்யாமல் போனதால் நிகழ்ந்த துயர சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் உத்தரகன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வாரை சேர்ந்த தம்பதியினர் கல்குட்கர் மற்றும் சஞ்சனா.

இவர்களுக்கு, சானித்யா என்ற 8 மாத குழந்தை உள்ளது.

இந்நிலையில், சஞ்சனா தனது வீட்டில் உள்ள மொபைல் போனிற்கு சார்ஜ் போட்டுவிட்டு, ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் சென்றுள்ளார்.

அப்போது. அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 மாத குழந்தையான சானித்யா சார்ஜர் வயரை கடித்துள்ளது, எதிர்பாராதவிதமாக வயரில் மின்சாரம் பாய்ந்து குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளது.

உடனே, குழந்தையின் பெற்றோர் பதறிப்போய் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சார்ஜ் வயரில் மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தைகள் இருக்கும் இடத்தில் பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சார்ஜ் வயர்களிலோ, கேபிள் வயர்களிலோ, இன்டெர்ன்ட் வயர்களிலோ மின்சாரம் பாய்ந்து கொன்டே இருக்கும். அதை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். மேலும், மொட்டை மாடியில் போகும் வயரில் ஈரத்துணியை காய வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 683d2e2c6c0e6
செய்திகள்இலங்கை

இலங்கைத் தமிழர் விடிவு இந்திய அரசாங்கத்தால் மட்டுமே சாத்தியம்: யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் கருத்து!

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து...

images 15
செய்திகள்இலங்கை

உப குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் சிறப்புப் பரிந்துரை!

அரச சேவையின் மறுசீரமைப்பு, முறையான வேதனைக் கட்டமைப்பை உருவாக்குதல், மற்றும் தொழில்முறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நிறுவுதல்...

Bribery Commission
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய இழப்பீடு மோசடி: ₹100 கோடிக்கும் அதிகமான இழப்பீடு பெற்ற 42 முன்னாள் அமைச்சர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சட்ட நடவடிக்கை!

அரகலய போராட்டத்தின் போது வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, 100 கோடிக்கும்...

ak am 2003
செய்திகள்அரசியல்இலங்கை

அர்ஜூன் மகேந்திரன், ராஜபக்ச சொத்துக்கள்: இரகசிய நடவடிக்கையில் இறங்கிய அரசாங்கம்

மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை...