சார்ஜர் வயரை கடித்த 8 மாத குழந்தை மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலி!
உலகம்செய்திகள்

சார்ஜர் வயரை கடித்த 8 மாத குழந்தை மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலி!

Share

சார்ஜர் வயரை கடித்த 8 மாத குழந்தை மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலி!

செல்போன் சார்ஜர் வயரை கடித்த 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செல்போனிற்கு ஜார்ஜ் போட்டுவிட்டு அதனை ஆஃப் செய்யாமல் போனதால் நிகழ்ந்த துயர சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் உத்தரகன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வாரை சேர்ந்த தம்பதியினர் கல்குட்கர் மற்றும் சஞ்சனா.

இவர்களுக்கு, சானித்யா என்ற 8 மாத குழந்தை உள்ளது.

இந்நிலையில், சஞ்சனா தனது வீட்டில் உள்ள மொபைல் போனிற்கு சார்ஜ் போட்டுவிட்டு, ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் சென்றுள்ளார்.

அப்போது. அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 மாத குழந்தையான சானித்யா சார்ஜர் வயரை கடித்துள்ளது, எதிர்பாராதவிதமாக வயரில் மின்சாரம் பாய்ந்து குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளது.

உடனே, குழந்தையின் பெற்றோர் பதறிப்போய் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சார்ஜ் வயரில் மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தைகள் இருக்கும் இடத்தில் பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சார்ஜ் வயர்களிலோ, கேபிள் வயர்களிலோ, இன்டெர்ன்ட் வயர்களிலோ மின்சாரம் பாய்ந்து கொன்டே இருக்கும். அதை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். மேலும், மொட்டை மாடியில் போகும் வயரில் ஈரத்துணியை காய வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....