24 66646536d5497
இந்தியாஉலகம்செய்திகள்

அம்பானி குடும்பத்தின் புதிய முயற்சி: 1 மில்லியன் மரங்கள்

Share

அம்பானி குடும்பத்தின் புதிய முயற்சி: 1 மில்லியன் மரங்கள்

இந்தியாவின் தொழில் துறையில் முன்னிலையில் இருக்கும் அம்பானி குடும்பம், உலக சுற்றுச்சூழல் தினத்தன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு பாதுகாப்பு திட்டமான “வந்தாரா”வில்(Vantara) பிரபல நடிகர்கள் அஜய் தேவ்கன், பூமி படேகர் உள்ளிட்டோர் பங்கேற்ற வீடியோ பிரச்சாரத்தை தொடங்கியது.

நான்வந்தாரியன் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த விழிப்புணர்வு வீடியோ, நம் பூமியைக் காப்பாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

மறுபயன்பாடு செய்யக்கூடிய குடிநீர் பாட்டில்களை பயன்படுத்துதல், மரங்களை நடுதல், குறுகிய தூர பயணங்களுக்கு சைக்கிளை தேர்ந்தெடுப்பது போன்ற எளிய பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என இந்த வீடியோ மூலம் பிரபலங்கள் மக்களை ஊக்குவிக்கின்றனர்.

வீடியோ பிரச்சாரம் மட்டுமின்றி, ஜாம்நகரில் உள்ள தங்கள் தலைமையகத்தில் 5000 மரங்களை வந்தாரா அமைப்பு நட்டுள்ளது. மேலும், ஆண்டுதோறும் 10 லட்சம் மரங்களை நடும் என்ற உறுதிப்பாட்டையும் வந்தாரா அளித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...