Ayman al Zawahiri
உலகம்செய்திகள்

அல் கெய்டா இயக்கத்தின் தலைவர் தாக்குதலில் பலி!

Share

ஒஸாமா பின் லேடனுக்குப் பின்னர் அல் கெய்டா இயக்கத்தை வழிநடத்தி வந்த அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான அய்மன் அல்-ஜவாஹிரி (Ayman al-Zawahiri) ஆப்கானிஸ்தானில் சிஐஏ (CIA) தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் விசேட உரையாற்றவிருந்த அதிபர் ஜோ பைடன் காபூலில் நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பரேஷன் குறித்த தகவல்களை நாட்டுக்கு அறிவிக்கவிருந்தார் .

நியூயோர்க்கில் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட செப்டம்பர் 11 பேரழிவுத் தாக்குதல் உட்பட உலகெங்கும் அமெரிக்கர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்காகத் தேடப்பட்டு வந்தவர் ஜவாஹிரி. 71 வயதான அல் – ஜவாஹிரி

தலைநகர் காபூலில் மிக முக்கிய இலக்கு ஒன்றின் மீது அமெரிக்க உளவு அமைப்பு நடத்திய ட்ரோன் தாக்குதலிலேயே சிக்குண்டு உயிரிழந்தார் என்று அமெரிக்க செய்தி ஊடகங்கள் முன்னராகத் தகவல் வெளியிட்டிருந்தன.

காபூலில் அல் – ஜவாஹிரி தங்கியிருந்த பாதுகாப்பான மறைவிடத்தின் மீது கடந்த சனிக்கிழமை இரவு 9.48 மணியளவில் இரண்டு ஹெல்ஃபயர் ஏவுகணைகளைப் (Hellfire missiles) பயன்படுத்தி மிகத் துல்லியமான வான் வழித் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதிபர் ஜோ பைடனின் அனுமதியுடன் நடத்தப்பட்ட இந்த ஒப்பரேஷன் குறித்த தகவல் எதுவும் தலிபான் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

வீட்டின் பல்கனியில் தங்கியிருந்த சமயத்திலேயே அல் கெய்டா தலைவர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பிள்ளைகள் உட்பட வீட்டில் இருந்த ஏனைய எவருக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் அந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

காபூலில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டதை தலிபான் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அல் – ஜவாஹிரி அங்கிருந்தாரா என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

எகிப்திய நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவரான அய்மன் அல்-ஜவாஹிரி, 2011 இல் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட அல் கெய்டா தலைவர் ஒஸாமா பின் லேடனின் வலதுகரமாகச் செயற்பட்டு வந்தவர்.

ஒஸாமா கொல்லப்பட்ட பிறகு அந்த அமைப்பின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டவர். உலக இஸ்லாமியத் தீவிரவாத வலைப்பின்னலின் தலைமைச் சித்தாந்தவாதி(chief ideologue) என்று அவர் வர்ணிக்கப்பட்டுவந்தார்.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான் ஆட்சி அதிகாரம் ஏற்பட்டதை அடுத்து அல் கெய்டா இயக்கத்துடன் தலிபான் இணைந்து செயற்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அல் கெய்டா இயக்கத்துக்கு ஆப்கானில் இடமளிக்கப் போவதில்லை என்பதைத் தலிபான் அமைப்பு கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் செய்துகொண்டஅமைதி உடன்படிக்கையில் உத்தரவாதப்படுத்தியிருந்தது.

இந்த நிலையிலேயே அல் கெய்டா தலைவர் காபூலில் கொல்லப்பட்டிருக்கிறார். காபூலில் நடத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று தலிபான் பேச்சாளர் கண்டித்திருக்கிறார். தலிபான் இயக்கத்துடன் அமெரிக்கா கடந்த ஆண்டு டோஹாவில் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு (Doha agreement) முரணான அத்துமீறல் இது என்றும் அந்த அமைப்பு சாடியுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...