10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞர்
உலகம்செய்திகள்

10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞர்

Share

10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த லஸ்டின் இம்மானுவேல் என்ற இளைஞர் ஒரே நேரத்தில் 10 பெண்களை திருமணம் செய்து அசத்தியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த 28 வயதான லஸ்டின் இம்மானுவேல் என்ற இளைஞர் கடந்த மாதம் ஜூலை 31ம் திகதி 10 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமண விழாவை லஸ்டின் கடற்கரையில் தன்னுடைய 10 மனைவிகளுடனும் கொண்டாடினார்.

இமானுவேல் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, இன்று 10 பெண்களை திருமணம் செய்து கொண்டேன், அனைவரும் தற்போது என் மனைவிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்த வீடியோவில்  மணமகன் லஸ்டின் இம்மானுவேலை 9 இளம் பெண்கள் வெள்ளை நிற திருமண உடையுடன் கையில் பூங்கொத்து வைத்து கொண்டு சுற்றி வருகின்றனர், மேலும் இன்னொரு பெண் லஸ்டின் இம்மானுவேல் மடியில் அமர்ந்துள்ளார்.

இமானுவேல் சமூக ஊடகங்களில் பிரபலமானவர் மற்றும் பெண்களுக்கு மசாஜ் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சமூக ஊடகத்தில் அவர் தன்னுடைய திருமண வீடியோவை பகிர்ந்து இருந்த நிலையில், அந்த வீடியோ இதுவரை 5,81,000க்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...