tamilni 280 scaled
உலகம்செய்திகள்

லண்டனில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி: இலட்சக்கணக்கில் ஒன்று திரண்ட மக்கள்

Share

லண்டனில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி: இலட்சக்கணக்கில் ஒன்று திரண்ட மக்கள்

லண்டனில் இஸ்ரேல் – ஹமாஸ் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சுமார் 100,000 மக்கள் திரண்டு பேரணியில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த பேரணியானது இன்று (21.10.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேரணியில் பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து முழக்கமிட்ட மக்கள், கைகளில் பாலஸ்தீன கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பேரழிவு தரும் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய சீன நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா
பேரழிவு தரும் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய சீன நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா

பேரணியிலிருந்த காசா பெண்ணொருவர், “பாலஸ்தீன நாட்டவரான தாம் ஒரு நாள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என ஆசைப்படுகிறேன். காசாவில் குடும்பத்தினர் உள்ளனர். பாலஸ்தீன விடுதலை தொடர்பில் தீவிர நடவடிக்கை தேவை. தற்போதைய சூழலில் பேரணி ஒன்றே தீர்வாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்த பேரணியானது, மத்திய லண்டனில் தொடங்கி பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தியோகப்பூர்வ இல்லம் முன்பு முடிவடைந்துள்ளது.

பேரணியில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் படங்கள் போர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

லண்டனில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி: இலட்சக்கணக்கில் ஒன்று திரண்ட மக்கள்

தடை செய்யப்பட்ட ஹமாஸ் குழுவினருக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றச்செயல் என குறிப்பிடப்பட்டிருந்த போதும், இந்த பேரணியானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 100,000 மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்ட போதும் அமைதியான முறையிலேயே இப்பேரணி நடைபெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...