download 8 1 10
உலகம்செய்திகள்

ஆண்களை விரட்டி அடிக்கும் விநோத திருவிழா!

Share

பெண்களிடம் அடி வாங்குவது ஆண்களுக்கு எந்த வித கோபத்தையோ அல்லது காழ்ப்புனர்சியையோ ஏற்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக இவ்வாறு பெண்களிடம் அடி வாங்குவதற்கு அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

ஜோத்பூரில் வருடத்திற்கு ஒருமுறை திங்கா கவர் என்ற திருவிழா வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்பட்டு வருகிறது. வெகு விமரிசையாக நடக்கும் இந்த திருவிழாவின் மூலம் பெண்களின் வாழ்க்கை மேம்படுவதாகவும், சமூகத்தில் பெண்களுக்கென்று அதிகாரம் அளிக்கப்படுவதாகவும் பகுதி மக்கள் நம்புகின்றனர். இந்தத் திருவிழாவின் போது இங்கிருக்கும் எந்த ஒரு பெண்ணும், அந்த நகரத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று அவர்கள் கண்ணில் படும் ஆண்களை எல்லாம் அடித்து நொங்கு எடுத்து விடுவார்கள்.

ஆனால் இவ்வாறு பெண்களிடம் அடி வாங்குவது ஆண்களுக்கு எந்த வித கோபத்தையோ அல்லது காழ்ப்புனர்சியையோ ஏற்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக இவ்வாறு பெண்களிடம் அடி வாங்குவதற்கு அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். வரலாற்றுக் காலத்தில் இருந்து திங்கா கவர் என அழைக்கப்படும் இந்த திருவிழாவின் போது அங்கு வசிக்கும் பெண்களுக்கு முழு அதிகாரமும் அளிக்கப்படுகிறது.

இந்த திருவிழாவின் போது இரவு 10 மணிக்கு மேல் ஜோத்பூரில் உள்ள பெண்கள் அனைவரும் வெவ்வேறு விதமான உடைகளில் தெருக்களில் இறங்கி அவர்கள் கண்ணில் படும் அனைத்து ஆண்களையும் அடிப்பார்களாம். அவ்வாறு அடி வாங்கும் ஆண்களில் மருத்துவர்கள், ராணுவ வீரர்கள், காவலர்கள் என பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் அடி விழும்.

குறிப்பாக திருமணமாகாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு திருவிழாவாக இது நம்பப்படுகிறது. இவ்வாறு பெண்களிடம் அடி வாங்குவதன் மூலம் விரைவிலேயே தங்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது இவர்களது நம்பிக்கை. இதற்காகவே நாடு முழுவதும் வெகு தொலைவில் இருந்து பலர் இங்கு அடி வாங்க வருகிறார்கள்.

இந்த திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தங்களது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணமாகவும், பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷாவின் மூன்றாவது நாளில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தங்களது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணமாகவும், பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷாவின் மூன்றாவது நாளில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

திருமணமாகாத பெண்கள் மட்டுமின்றி கணவனை இழந்த பெண்களும் தங்களது மன மகிழ்ச்சிக்காகவும் குடும்பத்தில் நிம்மதிக்காகவும் இந்த திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். திருமணமான பெண்கள் தங்களது கணவரின் நீண்ட காலம் ஆரோக்கியத்திற்காகவும் திருமணமாகாத பெண்கள் விரைவில் நல்ல மணமகனை பெறுவதற்காகவும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

இதைத் தவிர இந்த திருவிழாவிற்கான புராண கதையும் ஒன்று உண்டு. இன்றைய தினத்தில் பார்வதி தேவி தன்னை பலவாறு அழகுபடுத்தி கொண்டு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டதாகவும், பார்வதி தேவியின் விதவிதமான அழகை கண்ட சிவபெருமான் பார்வதி தேவியை தன்னுடன் அழைத்துச் சென்றதாகவும் ஒரு கதை உண்டு.

இதன் காரணமாக பண்டைய காலத்தில் இருந்து திங்கா கவர் எனப்படும் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் திங்கா என்ற வார்த்தை மோசடி என்பதையும், கவர் என்ற வார்த்தை பார்வதி தேவியையும் குறிக்கிறது. இந்த திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக பத்து நாட்கள் முன்னரே இப்பகுதி மக்கள் தயாராகிறார்கள்.

மேலும் இந்த திருவிழாவின் போது கவர் சிலையானது நகரத்தின் பல்வேறு பகுதிகளில் அலங்கரிக்கப்படுகிறது. 4.8 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இதன் மதிப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...