download 9 1 11
உலகம்செய்திகள்

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு!

Share

அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் சேவல் சண்டை போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

நாட்டில் உள்ள ஐம்பது மாகாணங்களிலும் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்ட போது ஒரு சில மாகாணங்களில் மட்டும் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்இ நேற்று முன்தினம் இரவு ஹவாய் தீவு மாகாணத்தின் ஹொனொலுலு நகரில் சேவல் சண்டை போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஏராளமானோர் தங்கள் சேவல்களை களத்தில் இறக்கி விளையாடி உள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இதில், ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். அந்த நேரத்தில் இருபது வயது இளைஞர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சேவல் சண்டையில் பங்கேற்றவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களையும், படுகாயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...