உலகம்செய்திகள்

திருக்குறளை உலகறியச் செய்தவருக்கு கனடாவில் உருவச்சிலை: முதல்வர் மு.கா.ஸ்டாலின் பெருமிதம்

Share

திருக்குறளை உலகறியச் செய்தவருக்கு கனடாவில் உருவச்சிலை: முதல்வர் மு.கா.ஸ்டாலின் பெருமிதம்

திருக்குறளை உலகறியச் செய்த ஜி.யு. போப்பிற்கு (George Uglow Pope) கனடாவில் உருவச்சிலை அமைக்கப்பட்டதை குறித்து பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

ஜி. யு. போப் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணி அளப்பரியது. அவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஆவார்.

தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்தவர்
அவரது மொழிபெயர்ப்பு உன்னதமான மொழிபெயர்ப்பாக இன்றும் போற்றப்படுகின்றது. அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பன்னிரெண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

அவரது அரிய இப்பணி, தமிழ் மொழியை தமிழர் அல்லாதவர்களிடமும் கொண்டு சேர்த்தது. போப் ஐயர் என்று அன்போடு அழைக்கப்பட்ட இவர், ஏறத்தாழ 40 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழ்ப் பணியாற்றினார்.

அதன் பின்பும், இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் (oxford) பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்தார்.

1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது, அப்போது முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஜி.யு. போப் தமிழுக்கு ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அவரது முழு உருவச்சிலையை நிறுவி அவரது புகழுக்கு பெருமை சேர்த்தது.

மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் செயல்பட்டு வரும் எங்கள் திராவிட அரசு, தமிழ் இலக்கிய நூல்களை, பல்வேறு வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கும் சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக ஜி.யு.போப் பெயரில் விருது வழங்கியும் சிறப்பித்து வருகிறது.

இம்முயற்சியை முன்னெடுக்கின்ற கனடியத் தமிழர் பேரவைக்கும், கனடா வாழ் தமிழ் மக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...