மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு சிலை: ரசிகர்களின் நெகிழ்ச்சி சம்பவம்

marisankil

மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு சிலை: ரசிகர்களின் நெகிழ்ச்சி சம்பவம்

மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு ரசிகர்கள் சிலை வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மாரிமுத்து சினிமா துறையில் புகழ்பெற்று விளங்கிய நிலையில் இவருக்கு ‘எதிர்நீச்சல்’ சீரியல் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைய செய்தது.

குறிப்பாக, இவரது ”ஏய் இந்தாம்மா” வசனத்திற்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி காரணமாக மாரிமுத்து மரணமடைந்தார், இன்று வரை இவரது இழப்பு பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

இந்நிலையில் தற்போது மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்கு ரசிகர்கள் சிலை அமைத்துள்ளனர்.

அதாவது விழுப்புரத்தில் நடிகர் மாரிமுத்துவுக்கு பாஜகவினர் சிலை வைத்துள்ளனர்.

மறைந்த நடிகர் மாரிமுத்து மற்றும் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கும் சிலை வைத்துள்ளனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version