பழ ஜூஸ் பாக்கெட்டில் இறந்து கிடந்த எலி! அதிர்ச்சி புகைப்படம்
உலகம்செய்திகள்

பழ ஜூஸ் பாக்கெட்டில் இறந்து கிடந்த எலி! அதிர்ச்சி புகைப்படம்

Share

பழ ஜூஸ் பாக்கெட்டில் இறந்து கிடந்த எலி! அதிர்ச்சி புகைப்படம்

இந்திய மாநிலம் தமிழகத்தில் 10 ரூபாய் மாஸா பழ ஜூஸ் பாக்கெட்டில் செத்து போன எலி ஒன்று கிடந்துள்ள வீடியோ வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டம் பி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சீனிவாசன் மற்றும் நதியா.  இவர்கள் உணவகம் ஒன்றினை நடத்தி வருகிறார்கள்.

இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அப்போது, உணவகத்திற்கு அருகே உள்ள ஒரு பெட்டி கடையில் உள்ள 10 ரூபாய் மாஸா ஜூஸ் பாக்கெட்டை இவருடைய மகனும், மகளும் வாங்கி வந்துள்ளனர்.

அப்போது சிறுவன் சரவணன், ஜூஸ் பாக்கெட்டை பிரித்து ஸ்ட்ரா வைத்து குடிக்க தொடங்கியுள்ளார்.

வழக்கத்திற்கு மாறாக ஜூஸ் கசப்பாக இருந்ததால் சிறுவன் பாக்கெட்டை பிரித்து பார்த்துள்ளார். அதில், குட்டி எலி ஒன்று செத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில், சிறுவன் தன் தந்தையிடம் சென்று ஜூஸ் பாக்கெட்டை காண்பித்துள்ளார். பின்பு, தந்தை சீனிவாசன் அதை வீடியோவாக எடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது, மாஸா ஜூஸ் பாக்கெட்டில் இறந்து போன எலி இருந்தது அச்சத்தையும், அதிர்ச்சியையும் கொடுக்கிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 170
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று முன்னோக்கிச் செல்வோம்: நாமல் ராஜபக்ச அழைப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்காலை, கால்டன் ஹவுஸில் இன்று (ஏப்ரல் 15) நடைபெற்ற...

world 169
செய்திகள்இலங்கைபிராந்தியம்

57.5 கிலோ இறந்த கோழி இறைச்சி மீட்பு – வர்த்தகருக்கு எதிராக வழக்கு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட...

world 168
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் இறக்குமதியாளர்களுக்கு வரிப்பணம் மீளளிப்பு: புதிய நடைமுறை திங்கட்கிழமை ஆரம்பம்!

அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வசூலிக்கப்பட்ட...

world 167
செய்திகள்உலகம்

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: டொனால்ட் ட்ரம்பிற்கு அதிகரிக்கும் சர்வதேச அழுத்தங்கள்!

ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் ‘அதிகபட்ச அழுத்தம்’ கொடுக்கும் கொள்கையினால், அமெரிக்க ஜனாதிபதி...