24 662d5037b0da1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் நடுவானில் திடீரென உடைந்து விழுந்த விமான கதவு

Share

அமெரிக்காவில் நடுவானில் திடீரென உடைந்து விழுந்த விமான கதவு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் (John F. Kennedy International Airport) இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் அவசர கதவுகள் தீடிரென கீழே விழுந்த சம்பவத்தினால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.

டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 520 என்ற எண் கொண்ட போயிங் 767 ரக குறித்த விமானமானது லாஸ் ஏஞ்சல்ஸ்(Los Angeles) நகர் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது.

இதன்போது, அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த வேளை, அதன் அவசரகால கதவு திடீரென விமானத்தில் இருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்துள்ளது.

இது தொடர்பில் விமானிக்கு தகவல் சென்ற நிலையில் உடனடியாக அந்த விமானம் மீண்டும் நியூயார்க்குக்கு திரும்பி அனுப்பப்ட்டுள்ளது. இந்த சம்பவம், விமானம் புறப்பட்டு சென்று 33 நிமிடங்கள் கழிந்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் விமான பயணி ஒருவர் கூறும்போது, விமானத்திலிருந்து ஒரு பெரிய சத்தம் கேட்டது. இதனால், விமானி அறையில் இருந்து அடுத்து, வெளியான அறிவிப்புகளை கூட சரியாக கேட்க முடியவில்லை. இந்த சம்பவம் எதிரொலியாக, பயணிகள் அனைவரும் உண்மையில் பயந்து போய் விட்டோம் என்று கூறியுள்ளார்.

மேலும், டெல்டா விமான நிறுவன பிரதிநிதி ஒருவர் சம்பவம் குறித்து கூறும்போது, எங்களுடைய நிறுவனம் மீட்பு முயற்சிகளுக்கு முழுமையாக ஆதரவளிக்கும். விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விமானத்திலிருந்து அவசரகால கதவு கீழே விழுந்த சம்பவம் பற்றி அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....