24 662d69dd72845
இலங்கைசெய்திகள்

நாட்டில் அதிகரித்து வரும் நோய் தாக்கம்

Share

நாட்டில் அதிகரித்து வரும் நோய் தாக்கம்

இலங்கையில் சிறுவர்கள் மற்றும் இளம் பராயத்தினரிடையே ஆஸ்துமா(Asthma) நோய் அதிகரித்து வருவதாக சுவாசநோய் தடுப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையின் சிறுவர்கள் மற்றும் இளம் பராயத்தினர் மத்தியில் 10 தொடக்கம் 15 வீதம் வரையான ஆஸ்துமா நோயாளிகள் பதிவாகி வருவதாகவும் வைத்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை சுவாசநோய் தடுப்பு நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் நெரஞ்சன் திசாநாயக்க, ஆஸ்துமா என்பது தொற்றா நோயாக காணப்பட்ட போதும் பரம்பரை அலகுகள் ஊடாக பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு கடத்தப்படலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஆஸ்துமாவை இலகுவாகக் குணப்படுத்த முடியும் என்ற போதும் நீண்ட காலத்திற்கு அதற்கான உரிய சிகிச்சை எடுக்கப்படாத நிலையில் சுவாசக் கட்டமைப்பில் சிக்கல்கள் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் நிலையும் ஏற்படலாம் என்றும் மருத்துவர் நெரஞ்சன் எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...