02 7 300x150 2
உலகம்செய்திகள்

கொத்து கொத்தாக கரையொதுங்கும் திமிங்கலங்கள்!

Share

நியூசிலாந்து கடற்பகுதியில் 450 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரைப் பகுதிகளில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் உலகம் முழுவதும் அவ்வப்போது நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் கூட பல பகுதிகளில் திமிங்கலங்கள் பல முறை கரை ஒதுங்கி இறந்திருக்கின்றன.

மணப்பாடு கடற்கரையில் 1973-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் திக தி 147 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஓரிரு நாட்கள் உயிரோடு இருந்த அவை பின்னர் இறந்துவிட்டன. சமீப ஆண்டுகளாக அவு ஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

நியூசிலாந்தின் சதாம் மற்றும் பிட் தீவுகள் அதிகளவில் திமிங்கலங்கள் வசிக்கும் பகுதியாக இருந்து வருகின்றன. சாத்தம் தீவில் கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி சுமார் 215 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. இதனைத் தொடர்ந்து, அதற்கு மறுநாளே அருகிலுள்ள பிட் தீவில் 240 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. மொத்தமாக 455 திமிங்கலங்கள் இறந்துள்ளன. இவ்வளவு திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இறந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய பிறகு உயிரோடு இருக்கும் பட்சத்தில் அதனை மீண்டும் கடலில் மிதக்க விடுவதற்கான முயற்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், சதாம் மற்றும் பிட் தீவுகளில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் அப்படியே கடந்த சில நாட்களாக கிடக்கின்றன. கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நூற்றுக்கும் குறைவான மக்கள் வசிக்கும் அந்த தீவில் தளவாடப் பிரச்சினைகளைத் தவிர, அவற்றை மீண்டும் நீரில் மிதக்கச் செய்தால், சுறாக்கள் அவற்றை உணவாக்கிக் கொள்ளக் கூடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக திமிங்கலங்கள் கருணைக்கொலை செய்யப்பட்டதாக கடல் பாதுகாப்புத் துறையின் தொழில்நுட்ப ஆலோசகர் டேவ் லுண்ட்கிஸ்ட் தெரிவித்தார். இருப்பினும் திமிங்கலங்கள் இவ்வாறு கரை ஒதுங்கி இறப்பதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

கடலின் ஆழமான பகுதிகளில் உயிர் வாழும் வெள்ளை சுறாக்கள் மிகவும் ஆபத்தானவை. இத்தகைய சுறாக்களால் மற்ற மீன் வகை உயிரினங்களுக்கு அதிக அளவில் ஆபத்து நிலவுகிறது. இவைகளில் வேட்டையாடும் தன்மையால் கொலையாளி திமிங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. அத்தகைய சுறாக்களினால் தான் திமிங்கலங்களின் வாழ்வியல் பாதிக்கப்படுவதாக உயிரியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.”

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
WhatsApp Image 2024 08 02 at 17.13.20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பெற்றோருக்குச் சுமையற்ற, நவீன கல்வி முறை – ஜனாதிபதி அநுர குமார!

பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையையும், பிள்ளைகளுக்குத் துயரத்தையும் தராத ஒரு புதிய கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக...

images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச்...

MediaFile 8 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் ஊழல் நிறைந்தது: அமைச்சர் குமார ஜயகொடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால்!

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி விலைமனுக் கோரலில் (Coal Tender) பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள...

1500x900 44538875 ipl2026
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல் 2026: சின்னசுவாமி மைதானத்திலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி! – ராஜஸ்தான் அணியும் இடம் மாறுகிறது.

ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்...