download 9 1 20
இந்தியாஉலகம்செய்திகள்பிராந்தியம்

கொதிக்கும் ரசத்தில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு!

Share

தமிழக மாவட்டம் திருவள்ளூரில் இளைஞர் ஒருவர் கொதிக்கும் ரச பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடந்த 23ம் திகதி, திருமண மண்டபத்தில் சமையல் வேலை நடந்துள்ளது. அப்போது 20 வயது இளைஞர் ஒருவர் அங்கு சமைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கொதிக்கும் ரசம் இருந்த பாத்திரத்தில் தவறி விழுந்துள்ளார்.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் பதறிப்போய் இளைஞரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.உயிரிழந்த மாணவர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த இளைஞரின் பெயர் சதீஷ் (20) என்பதும், அவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.

பகுதி நேரமாக கேட்டரிங் சர்வீஸ் பணிக்கு வந்தபோது தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. பொலிஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 3
செய்திகள்இந்தியா

விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு: நடிகர் விஜய்யின் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் உள்ள...

10 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பகுதி சந்திர கிரகணத்தைக் காணும் அரிய வாய்ப்பு!

இலங்கையர்கள் மார்ச் 3, 2026 செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆர்தர்...

09 3
செய்திகள்உலகம்

வட்ஸ்அப் வெப் சேவையில் திடீர் முடக்கம்: ஐபோன் பயனர்கள் கடும் அவதி!

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் இன்று திடீர்...

08 3
செய்திகள்இலங்கை

குற்றவாளிகளைத் தேடி: சிவப்பு அறிவித்தல் இன்றி 14 பேர் நாட கடத்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவித்தல்கள் (Red Notice) இன்றி, இதுவரை 14 சந்தேக நபர்களை...