OIP 1
உலகம்செய்திகள்

ஹமாஸ் படையினருடன் தீவிர சண்டை: 8 இஸ்ரேலிய வீரர்கள் கொலை

Share

ஹமாஸ் படையினருடன் தீவிர சண்டை: 8 இஸ்ரேலிய வீரர்கள் கொலை

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதலில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும் ஹமாஸ் போராளி படை குழுவினருக்கும் இடையிலான சண்டை காசாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஹமாஸ் போராளி குழுவை முழுவதுமாக அழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேலிய ராணுவ படை காசாவில் தரைவழி தாக்குதலை முன்னகர்த்தி வருகிறது.

இதில் டஜன் கணக்கான ஹமாஸ் போராளி குழுவினர் கைது செய்யப்பட்டும், கொல்லப்பட்டும் வருகின்றனர்.

அதே சமயம் ஹமாஸ் படையினர் இஸ்ரேலிய வீரர்களை ஆங்காங்கே தாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் காசாவில் தற்போது 8 இஸ்ரேலிய வீரர்கள் ஹமாஸ் படையினர் உடனான சண்டையின் போது கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கைப்படி இதுவரை 154 இஸ்ரேலிய வீரர்கள் அக்டோபர் 20ம் திகதி தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கிய பிறகு கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இருந்து இதுவரை 480 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
10 5
இலங்கைசெய்திகள்

நானுஓயாவில் தேயிலையுடன் குடைசாய்ந்த லொறி: இருவர் படுகாயம்

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில்...

9 4
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

8 6
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு சேவைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் சேவைக்கு அமைச்சரவையின்...

7 9
இலங்கைசெய்திகள்

இரு கொலைகளை செய்த முன்னாள் அமைச்சரின் மனைவியும் விடுதலை : நீதிமன்றில் தகவல்

இலங்கையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு விடயத்தின் விசாரணைகளுக்கு மத்தியில், கொலைக்காக மரண தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர்...