OIP
உலகம்செய்திகள்

லண்டனில் பூமா மற்றும் Zara நிறுவனங்களின் கடைகளை மூட வைத்த பாலஸ்தீன ஆதரவாளர்கள்

Share

லண்டனில் பூமா மற்றும் Zara நிறுவனங்களின் கடைகளை மூட வைத்த பாலஸ்தீன ஆதரவாளர்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை விற்பனை களைகட்டிவரும் நிலையில் லண்டனின் பிரபலமான ஷொப்பிங் பகுதியில் அமைந்துள்ள பூமா மற்றும் Zara கடைகளை பாலஸ்தீன ஆதரவாளர்கள் மூட வைத்துள்ளனர்.

தொடர்புடைய இரு கடைகள் மட்டுமின்றி, ஆக்ஸ்போர்டு வீதி மற்றும் ரீஜண்ட் வீதியில் அமைந்துள்ள கடைகள் பல சனிக்கிழமை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குறைந்தது ஆயிரம் பேர்கள் கொண்ட குழு ஒன்று பாலஸ்தீன ஆதரவு பேரணியை இந்த இரு வீதிகளிலும் முன்னெடுத்துள்ளனர். காஸா மக்கள் வெடிகுண்டுக்கு இலக்காகும் நிலையில், இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்களின் கடைகளில் இருந்து எவரும் பொருட்கள் வாங்குவது முறையல்ல என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களிடம் கோரியுள்ளனர். இனப்படுகொலையை ஆதரிக்கும் Zara, இன்னும் ஒளிந்திருக்க முடியாது என்றும் முழக்கமிட்டுள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில் Zara வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்று, காஸா மக்களை கேலி செய்வதாக உள்ளது என குறிப்பிட்டு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்த விளம்பரத்தை Zara நிறுவனம் நீக்கியது.

இதேப்போன்று பூமா கடைகள் முன்பும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படும் வரையில், இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்கள் மூடப்படும் என்றே பாலஸ்தீன ஆதரவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 81
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலை – டயகம வீதியில் பேருந்தும் பாடசாலை வேனும் மோதி விபத்து: மாணவர்கள் காயமின்றித் தப்பினர்

தலவாக்கலை – டயகம பிரதான வீதியின் ஹோல்புறூக் நகருக்கு அருகாமையில் இன்று (மே 12) காலை...

world 80
செய்திகள்உலகம்

இளம்பெண்களின் அந்தரங்கத் தேடல்: ஆபாசப் படங்கள் குறித்த வெளிப்படையான பார்வைகள்

பெண்கள் ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்களா அல்லது இது ஆண்களுக்கு மட்டுமே உரியதா என்ற விவாதம் தற்போது...

world 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடக்கம்: யாழ்ப்பாணத்தில் நினைவு ஊர்தி பயணம் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17-வது ஆண்டு நினைவேந்தல் வாரமானது, இன்று (மே 12) யாழ்ப்பாணம் நல்லூரில்...

world 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க பேராதனை பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப் பீடத்தில் முதுதத்துவமாணி (M.Phil) பயின்று வந்த விரிவுரையாளர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட...