WhatsApp Image 2022 07 08 at 8.40.12 AM
உலகம்செய்திகள்

76 மில்லியன் ஆண்டு பழமையான டைனோசர் எலும்புக்கூடு ஏலம்

Share

சுமார் 76 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் சுற்றித்திரிந்ததாக நம்பப்படும் டைனோசரின் எலும்புக்கூடு இம்மாதம் நியூயோர்க்கில் ஏலத்திற்கு விடப்படும் என்று சௌதபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலும்புக்கூட்டுப் படிமம் டைரனோசொரஸ் வகையுடன் தொடர்புடைய கோர்கோசாரசுக்கு சொந்தமானது.

அமெரிக்காவின் மொண்டானா மாநிலத்தில் 2018இல் கண்டறியப்பட்ட எலும்புக்கூடு கிட்டத்தட்ட 3 மீற்றர் உயரமும் 6.7 மீற்றர் நீளமும் கொண்டுள்ளது.

இதுவரை கண்டறியப்பட்ட கோர்கோசாரஸ் எலும்புக்கூடுகள் அனைத்தும்அருங்காட்சியகங்களில் உள்ளதாகவும் இக்குறிப்பிட்ட எலும்புக்கூடு மட்டுமே தனியார் உரிமைக்குக் கிடைக்கக்கூடியது என்றும் ஏல நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தனது வாழ்க்கையில் பல தனித்துவமான பொருட்களை விற்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தாலும் அவற்றுள் சில பொருட்கள் மட்டுமே கோர்கோசொரஸ் எலும்புக்கூட்டைப் போல அதிகளவு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று சௌதபிஸ் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் கூறினார்.

எலும்புக்கூடு 5 மில்லியன் டொலரிலிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர்வரை விலைபோகலாம் என்று சௌதபிஸ் மதிப்பிட்டுள்ளது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 97
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்” – டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

ஈரான் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் தனக்குத்தானே விதித்துக்கொண்ட காலக்கெடு செவ்வாய்க்கிழமை நெருங்கிக்கொண்டிருந்த...

Untitled 96
உலகம்செய்திகள்

நிலவின் மறுபக்கத்திலிருந்து பூமி: ஆர்டெமிஸ் II விண்கலக் குழுவினரின் வரலாற்றுச் சாதனைப் புகைப்படம் வெளியீடு!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் சென்றுள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ (Artemis...

Untitled 95
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லக்விஜய மின் நிலைய நிலக்கரி கொள்முதல்: விசேட தணிக்கை அறிக்கை வெளியீடு!

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக லங்கா நிலக்கரி நிறுவனம் மேற்கொண்ட நிலக்கரி கொள்முதல் செயல்முறை குறித்தும்,...

Untitled 94
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு நெருக்கடி: மக்களுக்குப் பாரிய நிவாரணத் தொகுப்பை அறிவித்தார் ஜனாதிபதி அனுர!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில், நடந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியால்...