g
உலகம்செய்திகள்

படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 29 பேர் சாவு !

Share

படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 29 பேர் சாவடைந்துள்ளனர்.

நைஜீரியாவின் கெனோ மாநிலத்தின், வடரி ஆற்றில் திடீரென படகு கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேர் சாவடைந்துள்ளானார்.

படாவ் கிராமத்தில் இருந்து பாக்வாய் நகருக்கு 50க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சாவடைந்தவர்களில் பெரும்பாலானோர் மத நிகழ்வொன்றுக்குச் சென்ற, 6 முதல் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

அத்தோடு விபத்துக்குள்ளான படகில் சுமார் 40 மாணவர்கள் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிர்த்தப்பிய 7 பேரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படகு கவிழ்ந்ததற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அதிக சுமை மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக இந்த விபத்துக்கு நடந்திருக்கலாமென மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...