g
உலகம்செய்திகள்

படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 29 பேர் சாவு !

Share

படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 29 பேர் சாவடைந்துள்ளனர்.

நைஜீரியாவின் கெனோ மாநிலத்தின், வடரி ஆற்றில் திடீரென படகு கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேர் சாவடைந்துள்ளானார்.

படாவ் கிராமத்தில் இருந்து பாக்வாய் நகருக்கு 50க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சாவடைந்தவர்களில் பெரும்பாலானோர் மத நிகழ்வொன்றுக்குச் சென்ற, 6 முதல் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

அத்தோடு விபத்துக்குள்ளான படகில் சுமார் 40 மாணவர்கள் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிர்த்தப்பிய 7 பேரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படகு கவிழ்ந்ததற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அதிக சுமை மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக இந்த விபத்துக்கு நடந்திருக்கலாமென மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 19
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்காக கொழும்பில் தேடப்படும் வீடு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தங்குவதற்காக கொழும்பில் வீடொன்று தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

4 18
இலங்கைசெய்திகள்

உப்பு தட்டுப்பாட்டுக்கு அமைச்சரவையை குற்றம் சுமத்தும் உற்பத்தியாளர்கள்

உப்பை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை முடிவை செயற்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே, நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள...

3 19
இலங்கைசெய்திகள்

யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை

யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. குறித்த...

2 27
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதிக்கு பயணிகளுடன் சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம் – கழன்றோடிய சக்கரம்

நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த...