tamilni Recovered 1 scaled
உலகம்செய்திகள்

தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே 23 Km நீளத்தில் கடல் பாலம்.., இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

Share

தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே 23 Km நீளத்தில் கடல் பாலம்.., இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் பாலம் அமைக்கும் பணியை இந்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பையில் கடந்த 2016 -ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு 21.8 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட Atal Setu Bridge சமீபத்தில் திறக்கப்பட்டது. கடலில் மட்டும் சுமார் 16.5 கி.மீ தூரம் கட்டப்பட்ட இந்த பாலம் இந்தியாவின் நீண்ட பாலம் என்ற பெருமையை பெற்றது.

அந்தவகையில், இந்தியாவின் சுற்றுலாவையும் பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்கு இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதன்படி மற்றொரு அறிவிப்பையும் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் பாலம் அமைக்கும் பணியை இந்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, இந்தியாவின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னாரை இணைக்கும் வகையில் கடலின் குறுக்கே 23 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டம் நிறைவேறினால், இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகத்திற்கும், குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், இதனால் போக்குவரத்து செலவை 50 % குறைத்து இலங்கை தீவை இணைக்க உதவும் என்றும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா வந்திருந்த இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பாலம் அமைப்பதற்கு ஒப்புதல் தெரிவித்தார். தற்போது, பாலம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...