tamilni Recovered 1 scaled
உலகம்செய்திகள்

தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே 23 Km நீளத்தில் கடல் பாலம்.., இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

Share

தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே 23 Km நீளத்தில் கடல் பாலம்.., இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் பாலம் அமைக்கும் பணியை இந்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பையில் கடந்த 2016 -ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு 21.8 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட Atal Setu Bridge சமீபத்தில் திறக்கப்பட்டது. கடலில் மட்டும் சுமார் 16.5 கி.மீ தூரம் கட்டப்பட்ட இந்த பாலம் இந்தியாவின் நீண்ட பாலம் என்ற பெருமையை பெற்றது.

அந்தவகையில், இந்தியாவின் சுற்றுலாவையும் பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்கு இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதன்படி மற்றொரு அறிவிப்பையும் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் பாலம் அமைக்கும் பணியை இந்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, இந்தியாவின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னாரை இணைக்கும் வகையில் கடலின் குறுக்கே 23 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டம் நிறைவேறினால், இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகத்திற்கும், குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், இதனால் போக்குவரத்து செலவை 50 % குறைத்து இலங்கை தீவை இணைக்க உதவும் என்றும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா வந்திருந்த இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பாலம் அமைப்பதற்கு ஒப்புதல் தெரிவித்தார். தற்போது, பாலம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...