20 30
உலகம்செய்திகள்

லெபனானில் கைப்பற்றிய ரஷ்ய ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் இஸ்ரேல்

Share

லெபனானில் கைப்பற்றப்பட்ட ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பு திட்டமிட்டுள்ளது.

இஸ்ரேல், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புடன் நடைபெற்ற மோதலின்போது கைப்பற்றிய சோவியத் மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்புவது குறித்து பரிசீலனை செய்கிறது.

இதற்கான ஆரம்ப செயல்பாடுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் உள்ளன.

சமீபத்தில், இஸ்ரேலிய அதிகாரிகள் உக்ரைனிய தூதரகத்துடன் ஆயுதங்களை அனுப்புவது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்க இராணுவ விமானங்கள் இஸ்ரேலிலிருந்து போலாந்தின் கிழக்கு பகுதிக்கு புறப்பட்டதாக அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

இஸ்ரேல் கைப்பற்றிய ஆயுதங்களில் 60% சோவியத் மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை.

இதில், ஸ்னைப்பர் (sniper rifles) துப்பாக்கிகள் மற்றும் Kornet anti-tank ஏவுகணைகள் அடங்கும்.

இந்த ஆயுதங்கள் சிரியா வழியாக ஹிஸ்புல்லாவுக்கு கிடைத்தவை என்று கூறப்படுகிறது.

இஸ்ரேலின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ஷாரன் ஹாஸ்கெல், கைப்பற்றிய ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப பரிந்துரை செய்துள்ளார். இதற்காக, உக்ரைனிய தூதரகம் அவருக்கு நன்றி தெரிவித்தது.

இஸ்ரேல், பொதுவாக ரஷ்யாவுக்கு எதிராக நியாயமான அணுகுமுறையை தக்க வைத்திருந்தது. ஆனால், சமீபத்தில் ரஷ்யா மற்றும் ஈரான் இடையேயான கூட்டணி அதிகரித்ததால், உக்ரைனுக்கு ஆதரவாக திரும்பியுள்ளது.

கடந்த மூன்று வருடங்களில், ஈரான், ரஷ்யாவுக்கு ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வழங்கியுள்ளது. இதேவேளை, ஈரான் ஆதரவு இயக்கங்கள், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா, இஸ்ரேலை எதிர்த்து செயல்படுகின்றன.

இந்த நடவடிக்கைகள் உக்ரைனுக்கான புதிய ஆயுத அனுப்புதலை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...