12 28
உலகம்செய்திகள்

பிரித்தானியா உக்ரைன் இடையே 100 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்: ரஷ்யா கவலை

Share

பிரித்தானியா உக்ரைன் இடையே 100 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்: ரஷ்யா கவலை

பிரித்தானியாவும் உக்ரைனும் தங்களுக்கிடையே 100 ஆண்டுகள் கூட்டாளர் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

இந்நிலையில், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய உக்ரைன் போர் சுமார் மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், ஐரோப்பா உக்ரைனுக்கு தங்கள் ஆதரவைக் காட்டும் வகையில் பிரித்தானியா உக்ரைனுடன் 100 ஆண்டுகள் கூட்டாளர் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

ஆனால், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பிரித்தானிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பிரித்தானியா உக்ரைனில் ராணுவ தளங்களை அமைக்கலாம் என்பது தொடர்பில் கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskovஇடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த Peskov, பிரித்தானியா ஒரு நேட்டோ நாடு என்பதால், எங்கள் நாட்டின் எல்லைக்கு அருகே அது ராணுவ தளத்தை அமைப்பது உண்மையாகவே கவலையை ஏற்படுத்தும் ஒரு விடயம்தான்.

எப்படியானாலும், என்ன நடக்கும் என்பது குறித்து ஆராயவேண்டியது அவசியமாகும் என்று கூறியுள்ளார் Peskov.

பிரித்தானியாவின் நடவடிக்கை புடினுக்கு எரிச்சலூட்டியுள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. ஆகவே, அதற்கு பதிலடி கொடுக்க புடின் அடுத்து என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...