12 28
உலகம்செய்திகள்

பிரித்தானியா உக்ரைன் இடையே 100 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்: ரஷ்யா கவலை

Share

பிரித்தானியா உக்ரைன் இடையே 100 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்: ரஷ்யா கவலை

பிரித்தானியாவும் உக்ரைனும் தங்களுக்கிடையே 100 ஆண்டுகள் கூட்டாளர் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

இந்நிலையில், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய உக்ரைன் போர் சுமார் மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், ஐரோப்பா உக்ரைனுக்கு தங்கள் ஆதரவைக் காட்டும் வகையில் பிரித்தானியா உக்ரைனுடன் 100 ஆண்டுகள் கூட்டாளர் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

ஆனால், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பிரித்தானிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பிரித்தானியா உக்ரைனில் ராணுவ தளங்களை அமைக்கலாம் என்பது தொடர்பில் கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskovஇடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த Peskov, பிரித்தானியா ஒரு நேட்டோ நாடு என்பதால், எங்கள் நாட்டின் எல்லைக்கு அருகே அது ராணுவ தளத்தை அமைப்பது உண்மையாகவே கவலையை ஏற்படுத்தும் ஒரு விடயம்தான்.

எப்படியானாலும், என்ன நடக்கும் என்பது குறித்து ஆராயவேண்டியது அவசியமாகும் என்று கூறியுள்ளார் Peskov.

பிரித்தானியாவின் நடவடிக்கை புடினுக்கு எரிச்சலூட்டியுள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. ஆகவே, அதற்கு பதிலடி கொடுக்க புடின் அடுத்து என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...