16 20
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு : ஜேர்மனிய உணவு பொருட்களுக்கு இறக்குமதி தடை

Share

பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு : ஜேர்மனிய உணவு பொருட்களுக்கு இறக்குமதி தடை

ஜேர்மனியில் (Germany) கோமாரி நோய் (Foot-and-Mouth) கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஜேர்மானிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய பிரித்தானியா (Britain) தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் கோமாரி நோய் பரவுவதைத் தடுக்க ஜேர்மனியிலிருந்து பன்றி இறைச்சி மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் இந்த நோய் கண்டறியப்படாதாலும், தடுப்பு நடவடிக்கையாக இத்தடை விதிக்கப்படுவதாகவும் இது நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவும் என்றும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கோமாரி நோய் என்பது மாடுகள், பன்றிகள், ஆடுகள், மீன்கள் மற்றும் இரட்டைச் சொறி கால்களைக் கொண்ட கால்நடைகளில் மிக வேகமாக பரவும் வைரஸ் நோயாகும்.

இது மனிதர்களுக்கு எந்தவித சுகாதார அபாயத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், 2001 இல் பிரித்தானியாவில் ஏற்பட்ட பெரும் பரவல் ஆறு மில்லியனுக்கு மேற்பட்ட கால்நடைகளை கொல்ல வழிவகுத்துடன் இது விவசாயிகளின் வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது, ஜேர்மனி பன்றி இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் சவால்களை சந்தித்து வருகின்றது. பிரித்தானியாவிற்கு ஜேர்மனி மூன்றாவது பெரிய பன்றிக் கறி ஏற்றுமதியாளராகவும் இரண்டாவது பெரிய பால் பொருட்கள் ஏற்றுமதியாளராகவும் உள்ள நிலையிலேயே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை, ஜேர்மனிய உணவுப் பொருட்களின் விநியோகத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...