13 20
உலகம்செய்திகள்

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வடகொரிய படையினர்

Share

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வடகொரிய படையினர்

உக்ரைன்(ukraine) போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவுடன்(russia) இணைந்துள்ள வட கொரிய(north korea) படையினரில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

தென்கொரிய தேசிய புலனாய்வு சேவையால் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லீ சுங்-க்வோன் மேலும் 1,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.

உயிரிழந்தவர்களில் உயர்மட்ட அதிகாரிகளும் உள்ளடங்குவதாகவும், துருப்புக்களுக்கு நிலப்பரப்பு பற்றிய பரிச்சயம் இல்லாமை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் இல்லாமை காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உக்ரைனில் வட கொரியாவின் உயிரிழப்புகள் பற்றிய முதல் அறிக்கை இந்த வார தொடக்கத்தில் வந்தது.

ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவ வடகொரியா கடந்த ஒக்டோபரில் 10,000 துருப்புக்களை அனுப்பியதாக தகவல் வெளியானது.

கடந்த சில மாதங்களாக வடகொரியாவுடனான உறவை ரஷ்யா வலுப்படுத்தி வருகிறது.

திங்களன்று அமெரிக்க பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் உக்ரைன் போரில் வட கொரியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியபோதிலும் எண்ணிக்கையை வெளியிடவில்லை.எனினும் ஒரு நாள் கழித்து பெயரிட விரும்பாத ஒரு அமெரிக்க அதிகாரி “பல நூற்றுக்கணக்கானவர்கள்” கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று கூறினார்.

வட கொரிய துருப்புக்கள், அவர்களில் எவருக்கும் எந்த முந்தைய போர் அனுபவமும் இல்லை, அவர்கள் முதல் வாரங்களை ரஷ்யாவில் பயிற்சியிலும் பின்னர் களத்திலும் கழித்ததாக நம்பப்படுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த திடீர் ஊடுருவலின் போது உக்ரைனால் கைப்பற்றப்பட்ட ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை, உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky), குர்ஸ்க் மீதான தாக்குதல்களில் “கணிசமான எண்ணிக்கையிலான வட கொரியர்களை” ரஷ்யா பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...