6 28
உலகம்செய்திகள்

இந்தியாவில் பெண் உள்ளிட்ட நான்கு இலங்கை தமிழர்கள் கைது

Share

இந்தியாவில் பெண் உள்ளிட்ட நான்கு இலங்கை தமிழர்கள் கைது

இந்தியாவிலிருந்து (India) இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயன்ற பெண் உள்ளிட்ட நான்கு இலங்கை தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக செல்ல முற்ப்ட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு வந்த 310 இற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கடற்பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியின் போது கையில் பயண பேக்குகளுடன் நின்று கொண்டிருந்த நான்கு இலங்கை தமிழர்களை தங்கச்சிமடம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

நால்வரும், மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த சசிகுமார் (28), கோகிலவாணி (44), வேலூர் அகதி முகாமைச் சேர்ந்த சேகர் (எ) ராஜ்மோகன் (39), சிதம்பரம் அகதி முகாமைச் சேர்ந்த நாகராஜ்( 68) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை செல்ல முற்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தயடுத்து கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமாக கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தங்கச்சிமடம் காவல்துறையினர் நால்வரையும் நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நான்கு பேரையும் கைது செய்த தங்கச்சிமடம் காவல்துறையினர், இவர்களுக்கு படகு மூலம் அழைத்துச் செல்ல முயன்றவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...