உலகம்செய்திகள்

இந்தியாவில் பெண் உள்ளிட்ட நான்கு இலங்கை தமிழர்கள் கைது

Share
6 28
Share

இந்தியாவில் பெண் உள்ளிட்ட நான்கு இலங்கை தமிழர்கள் கைது

இந்தியாவிலிருந்து (India) இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயன்ற பெண் உள்ளிட்ட நான்கு இலங்கை தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக செல்ல முற்ப்ட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு வந்த 310 இற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கடற்பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியின் போது கையில் பயண பேக்குகளுடன் நின்று கொண்டிருந்த நான்கு இலங்கை தமிழர்களை தங்கச்சிமடம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

நால்வரும், மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த சசிகுமார் (28), கோகிலவாணி (44), வேலூர் அகதி முகாமைச் சேர்ந்த சேகர் (எ) ராஜ்மோகன் (39), சிதம்பரம் அகதி முகாமைச் சேர்ந்த நாகராஜ்( 68) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை செல்ல முற்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தயடுத்து கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமாக கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தங்கச்சிமடம் காவல்துறையினர் நால்வரையும் நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நான்கு பேரையும் கைது செய்த தங்கச்சிமடம் காவல்துறையினர், இவர்களுக்கு படகு மூலம் அழைத்துச் செல்ல முயன்றவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...