5 22
உலகம்

ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா?

Share

ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா?

தொடர்ந்து நேட்டோ அமைப்பை விமர்சித்து வருபவரான ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா என்ற கேள்வி பல நாடுகளின் தலைவர்களிடையேயும் காணப்படுகிறது.

ட்ரம்ப் தொடர்ச்சியாக நேட்டோ அமைப்பை விமர்சித்து வருவதுடன், ஐரோப்பிய நாடுகள், பாதுகாப்புக்கு குறைந்த அளவிலேயே செலவு செய்யும் நிலையில், அமெரிக்கா நேட்டோவின் பட்ஜெட்டுக்கு அளவுக்கு அதிகமாக நிதி ரீதியாக பங்களிப்பைச் செய்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா என்ற கேள்வி மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

ஆனால், அமெரிக்கா நேட்டோவை புறக்கணிக்காது என தான் நம்புவதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலரான John Healey தெரிவித்துள்ளார்.

நேட்டோவுடனான கூட்டணி முக்கியமானது என்பதை அமெரிக்காவுக்குத் தெரியும் என்றும், ஐரோப்பாவுடன் முரண்பாட்டை தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை அமெரிக்கா புரிந்துகொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார் John Healey.

அதே நேரத்தில், ஐரோப்பிய நாடுகள் நேட்டோவுக்கு நிதி வழங்கும் விடயத்தில் இன்னமும் அதிக பங்களிப்பைச் செய்யவேண்டும் என ட்ரம்ப் கூறுவது சரிதான் என்று கூறியுள்ள John Healey, தானும் அதே கருத்து தொடர்பில் விவாதித்துவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 47
செய்திகள்உலகம்

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்கு விஜயம்: உறவுகளை வலுப்படுத்த புதிய முயற்சி

பிரித்தானிய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் கட்சி (Labour) மற்றும் கன்சர்வேடிவ் கட்சி (Conservative) ஆகிய இரு...

world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...

world 32
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: 14 அம்ச உடன்படிக்கை குறித்து ஈரான் பரிசீலனை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்...