27 14
உலகம்செய்திகள்

உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் நேரடியாக களமிறங்கிய வட கொரியா

Share

உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் நேரடியாக களமிறங்கிய வட கொரியா

உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவளிக்கும் வகையில், வட கொரியாவிலிருந்து 3,000 இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், வட கொரியாவின் இராணுவ வீரர்கள் ரஷ்யாவில் களமிறக்கப்பட்டுள்ளதை ஆதாரங்கள் வெளிப்படுத்துவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த வட கொரிய இராணுவத்தினர் ரஷ்யாவிற்கு ஆதரவாக போரிடத் தொடங்கினால் அது பெரிய ஆபத்தை விளைவிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யுத்தத்தில் வட கொரியாவின் செயற்பாட்டை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் 10,000 வட கொரிய படையினர், உக்ரைனுக்கு எதிரான போரில் இணையலாம் என நம்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி அறிவித்திருந்தமை குறிப்பிடத்க்கது.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...