31 2
உலகம்செய்திகள்

பங்களாதேஷிற்கு நாடு கடத்தப்படுவாரா ஷேக் ஹசீனா..!

Share

பங்களாதேஷிற்கு நாடு கடத்தப்படுவாரா ஷேக் ஹசீனா..!

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை(Sheikh Hasina) வங்கதேசத்துக்கு(bangladesh) நாடு கடத்தலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை இந்திய அரசுக்கு உள்ளது என்றும், ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்த இடைக்கால அரசு இந்தியாவைக் கோரலாம் என்றும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை ஆலோசகர் எம்.டி. தவ்ஹித் ஹொசைன் தெரிவித்தார்.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு அழைத்து வர இந்தியாவிடம் கோரிக்கை வைக்க இடைக்கால அரசு நிச்சயம் தயாராக உள்ளது என்றார்.

ஷேக் ஹசீனாவை பங்களாதேஷுக்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று ஹொசைன் கூறினார்.

இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பதாகவும், அதற்கான சட்ட நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் குறிப்பிட்டார்.

பங்களாதேஷ் போராட்டத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

ஆனால், வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தை இந்திய ஊடகங்கள் பெரிதுபடுத்தியதாகவும், மேற்கத்திய ஊடகங்கள் அத்தகைய முறையை பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார்.

பங்களாதேஷில் ஏற்பட்ட போராட்டத்தை அடுத்து அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகி இந்தியாவிற்கு தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...