29
உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் நாடுகடத்தியுள்ள ஜேர்மனி

Share

ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் நாடுகடத்தியுள்ள ஜேர்மனி

குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 28 ஆப்கானிஸ்தான் (Afghanistan) நாட்டவர்களை ஜேர்மனி (Germany) நாடு கடத்தியுள்ளது.

2021ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மனித உரிமைகள் தொடர்பான அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தும் நடவடிக்கையை ஜேர்மனி நிறுத்தியிருந்தது.

இதற்கிடையில், கடந்த வாரம் ஜேர்மனின் உள்ளூர் விழா ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தாக்குதல்தாரி ஐ.எஸ் ஆதரவாளர் என்பது தெரிய வந்ததும், நாடுகடத்தும் நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, புலம்பெயர் கொள்கைகள் கடுமையாக்கப்படும் என்றும் நாடுகடத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் ஜேர்மனி அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நடவடிக்கையின் முதற்கட்டமாகவே தீவிர குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 28 ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...