உலகம்செய்திகள்

நாடு முழுவதும் ஊரடங்கை அறிவிக்க தயாராகும் பங்களாதேஷ் அரசாங்கம்

Share
24 669b5bffe7ae4
Share

நாடு முழுவதும் ஊரடங்கை அறிவிக்க தயாராகும் பங்களாதேஷ் அரசாங்கம்

பங்களாதேஷ் அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை விதிக்கவும் இராணுவத்தை நிலைநிறுத்தவும் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்க வேலை ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் தலைமையிலான போராட்டங்கள் விரிவடைந்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போராட்டங்களில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று நள்ளிரவுடன் இரவு 105ஐ எட்டியதாக கூறப்படுகிறது.

எனினும், இது தொடர்பிலான சரியான தரவுகளை அரசாங்கம் வெளிப்படுத்த தவறிவருவதாக பங்களாதேஷின் அரசியல் விமர்சகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற போராடியவர்களின் குடும்பங்களுக்கு 30% அரசாங்க வேலைகளை என்ற ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர்களின் எதிர்ப்புகள் தற்போது ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...